வெற்றி கொண்டாட்டங்களை விட உயிர் முக்கியமானது - கபில்தேவ் கருத்து

11 hours ago 3

பெங்களூரு,

18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த இரு மாதங்களாக இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி ஆர்.சி.பி அணி கோப்பையை வென்றது. ஆர்.சி.பி. வெற்றி பெற்றதை கோலாகலமாக கொண்டாட பெங்களூருவில் வெற்றி பேரணி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த பேரணியில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டதன் காரணமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும், ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த உயிழப்புகளுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர். இந்த நிகழ்வுக்கு பல முன்னாள் வீரர்களும் வருத்தம் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, பெங்களூரு அணி ஐ.பி.எல். வெற்றியை கொண்டாடிய போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. இதில் இருந்து நாம் ஒவ்வொருவரும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

அடுத்த முறை இதே போன்று வெற்றி கொண்டாட்டம் நடக்கும் போது மக்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். எதிர்காலத்தில் எந்த அணி வெற்றி பெற்றாலும் அமைதியாக இருப்பதே நல்லது. ஏனெனில் கொண்டாட்டங்களை விட உயிர் தான் ரொம்ப முக்கியம். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி நன்றாக இருக்கிறது. கிரிக்கெட் என்பது அணி விளையாட்டாகும்.

எனவே ஒன்றிணைத்து ஒரு அணியாக விளையாடினால் வெற்றி பெற முடியும். இந்த போட்டி தனிநபர் பற்றியது அல்ல. எனவே சுப்மன் கில்லாக இருந்தாலும் சரி, ஜஸ்ப்ரித் பும்ராவாக இருந்தாலும் சரி ஒரு அணியாக ஆட வேண்டியது முக்கியம். இந்திய வீரர்களுக்கு எனது வாழ்த்துகள். வெற்றியோடு தாயகம் திரும்புவார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

Read Entire Article