வெடிமருந்து பறிமுதலில் ஒருவர் கைது

2 months ago 10

 

தொண்டி,நவ.20: தொண்டி அருகே வெடிமருந்து பறிமுதல் வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். தொண்டி அருகே ஓரியூர் பேருந்து நிலையம் அருகே சாலையில் கிடந்த ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர் உள்ளிட்ட வெடி பொருட்களை எஸ்பி.பட்டிணம் போலீசார் கடந்த ஆகஸ்ட் மாதம் பறிமுதல் செய்தனர். விசாரணையில் கடலில் வெடி வைத்து மீன் பிடிப்பதற்காக மீனவர்கள் வாங்கி வந்த போது, சாலையில் தவற விட்டு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து கோயமுத்தூரில் பதுங்கியிருந்த தொண்டி புதுக்குடியை சேர்ந்த செந்தில்குமார்(35) என்பவரை கைது செய்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இதே பகுதியை சேர்ந்த பழனி மகன் குமரன்(38) மற்றும் வெடி மருந்து பொருள்களை விற்பனை செய்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மூன்று பேரை கைது செய்தனர். நேற்று திருப்பாலைக்குடியை சேர்ந்த ராவுத்தர் மகன் முகம்மது ராசிக் (28) என்பவரை கைது செய்தனர்.

The post வெடிமருந்து பறிமுதலில் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article