வெங்கமேடு பகுதியில் 2 பேர் மாயம்

6 months ago 20

கரூர், நவ. 14: கரூர் மற்றும் வெங்கமேடு பகுதிகளில் வீட்டை விட்டு சென்ற தனது தாய் மற்றும் சகோதரர் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வையாபுரி நகர் பகுதியில் வசித்து வந்த அர்ஜூனன், கடந்த 10ம்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் இது வரை வீடு திரும்பவில்லை என உறவினர்கள் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதே போல், வெங்கமேடு காவல் நிலையத்திலும், பஞ்சமாதேவி பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவரும் வீட்டை விட்டு வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை எனவும் உறவினர்கள் புகாரளித்திருந்தனர். புகாரின் அடிப்படையில் டவுன் மற்றும் வெங்கமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்

The post வெங்கமேடு பகுதியில் 2 பேர் மாயம் appeared first on Dinakaran.

Read Entire Article