
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர், பாரதிநகரை சேர்ந்த கோமதிநாயகம் (வயது 29), முத்துமாரி ஆகிய இருவரும் கணவன் மனைவி ஆவர். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக முத்துமாரி அதே பகுதியில் உள்ள தனது அப்பா லெட்சுமணன் வீட்டிற்கு சென்று வசித்து வந்துள்ளார். இதனை மனதில் வைத்து கொண்டு கோமதிநாயகம் லெட்சுமணனை பார்க்கும் போதெல்லாம் அவதூறாக பேசி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கோமதிநாயகம், லெட்சுமணனின் வீட்டிற்கு சென்று, உன் மகள் எங்கே என்று கேட்டு அவதூறாக பேசி அரிவாளால் லெட்சுமணனின் பைக்கை சேதப்படுத்தியதோடு மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.
இதுகுறித்து லெட்சுமணன் வீரவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வீரவநல்லூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கோமதிநாயகத்தை கைது செய்து நடவடிக்கை எடுத்தார்.