சென்னை: சந்தன கடத்தல் வீரப்பனின் மைத்துனர் அர்ஜூனனின் மரணம் பற்றி 30 ஆண்டுக்கு பிறகு விசாரணை நடத்த ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. அர்ஜூனனின் மரணம் குறித்து விசாரணை நடத்தக் கோரி சதீஷ்குமார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. காவல்துறையினர் தாக்கி அர்ஜூனன் மரணம் அடைந்தார் என்பது தொடர்பாக எந்த புகாரும் இல்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
The post வீரப்பன் மைத்துனர் அர்ஜூனன் மரண வழக்கு தள்ளுபடி..!! appeared first on Dinakaran.