வீரசாகச செயல்புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

4 days ago 7

கரூர், ஜூன் 5: கரூர் மாவட்டத்தில் வீரசாகச செயல்புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருதுபெற ஜூன் 16ம்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம், நாசாவின், முதல் இந்திய பெண் விண்வெளி வீராங்கணை என்ற பெருமையை பெற்ற கல்பனா சாவ்லாவின் நினைவாக, தமிழ்நாட்டை சேர்ந்த துணிச்சலான மற்றும் வீர சாகச செயல் புரிந்த பெண்களுக்கு துணிவு மற்றும் வீர தீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்படவுள்ளது.

இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படும் விருதாளருக்கு விருதுக்கான பதக்கத்துடன் ரூ.5லட்சத்திற்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆகியவை வரும் சுதந்திர தின விழாவின் போது தமிழக முதல்வரால் வழங்கப்படவுள்ளது. விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தமிழக அரசின் விருதுகளுக்கான (https://www.awards.tn.gov.in) இணையதளத்தில் ஜூன் 16ம்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

இந்த இணையதளத்தில் விருதுக்கு விண்ணப்பித்த நகலுடன் கரூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு, விருதுக்கான விண்ணப்ப படிவத்தினை பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் துணிச்சலான மற்றும் வீரசாகச செயல் புரிந்தமைக்கான புகைப்படங்கள் மற்றும் பத்திரிக்கை செய்திக் குறிபபுகளுடன் ஆவணங்களை தமிழ், ஆங்கில மொழிகளில் தனித்தனியாக 3 செட் புக்லெட் செய்து ஜூன் 16ம்தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், கரூர் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வீரசாகச செயல்புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article