வீட்டு உபயோக சிலிண்டரை கடைகளில் பயன்படுத்தாதீர்: அதிகாரிகள் எச்சரிக்கை

2 months ago 10

 

மதுரை, நவ. 18: மதுரை மாவட்டத்தின் பல்வேறு ஓட்டல்கள் மற்றும் டீக்கடைகளில், திருட்டுத்தனமாக வணிக சிலிண்டர்களுக்கு பதிலாக வீட்டு உபயோக சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘‘மாவட்டத்தில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வீட்டு உபயோக சிலிண்டர்களை வணிக நிறுவனங்களில் பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உணவகங்கள், வணிக வளாகங்கள், பேக்கரிகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதேபோல் எடை குறைந்த பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கவும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’’ என்றனர்.

The post வீட்டு உபயோக சிலிண்டரை கடைகளில் பயன்படுத்தாதீர்: அதிகாரிகள் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article