சென்னை: வீடுகளை குத்தகைக்கு எடுத்து உரிமையாளர்களுக்கு தெரியாமல் மூன்றாவது நபர்களுக்கு அடமானம், மறுவாடகை அல்லது மறுகுத்தகைக்கு விட்டு ஏமாற்றும் நபர்கள் மீது மோசடி வழக்கு பதிவு செய்ய அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற மோசடிகளை தடுக்க விழிப்புணர்வு குறும்படமும் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்த தமிழக டிஜிபிக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை முகப்பேரில் உள்ள கனகராஜ் என்பவரின் வீட்டை குத்தகைக்கு எடுத்த கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர், அந்த வீட்டை கனகராஜூக்கு தெரியாமல் மூன்றாவது நபருக்கு அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்டார். இது தொடர்பாக கனகராஜ் அளித்த புகாரில் நொளம்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரி்த்து வருகின்றனர்.