விழுப்புரம், ஜூலை 16: விழுப்புரத்தைச் சேர்ந்தவர் நவதிநீதகிருஷ்ணன். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்துள்ளார். மல்லிகைபட்டை சேர்ந்த அய்யனார் என்பவர் இந்த ஆட்டோவை ஓட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று ரயில்வே ஜங்ஷன் பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோவை நிறுத்தியுள்ளார்.
அப்போது மருதூரைச் சேர்ந்த சதீஷ்குமார்(25), அங்கமுத்து, குமார்(27) ஆகிய மூன்று பேரும் ஆட்டோ ஸ்டாண்டிற்கு சென்று ஆட்டோவை ஓரமாக விடமாட்டாயா என்று கூறி உரிமையாளர் நவநீதகிருஷ்ணன், ஓட்டுநர் அய்யனார் ஆகியோரை சரமாரியாக தாக்கியதில் பலத்த காயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து நவநீதகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில் சதீஷ்குமார், குமார் ஆகியோரை கைது செய்தனர். இதேபோல் எதிர் தரப்பைச் சார்ந்த சதீஷ்குமார் தன்னை தாக்கியதாக அளித்த புகாரின்பேரில் ஆட்டோ டிரைவர் அய்யனார் மற்றும் பாலா, சிவக்குமார், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அய்யனார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post விழுப்புரம் ஆட்டோ ஸ்டாண்டில் தகராறு appeared first on Dinakaran.