விழுப்புரத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த 7 அரசுப் பள்ளிகளுக்கு மறுஅறிவிப்பு வரும் வரை விடுமுறை

4 months ago 14

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளத்தால் கடுமையாக சேதமடைந்த 7 அரசுப் பள்ளிகளுக்கு மட்டும் மறுஅறிவிப்பு வரும் வரை விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஃபெஞ்சல் புயல் காரணமாக வரலாறு காணாத மழையால் விழுப்புரம் மாவட்டத்தில் கடும் வெள்ளச்சேதம் ஏற்பட்டது. இதனால் கடந்த 26ம் தேதி முதல் 7ஆம் தேதி வரை ஒரு வாரம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளஅனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. ஒரு வார விடுமுறைக்கு பின் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் திறக்கப்பட்ட நிலையில் 7 அரசுப் பள்ளிகளுக்கு மட்டும் மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறைஅளிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article