வில்லிவாக்கத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவர் போக்சோவில் கைது

4 months ago 12


அம்பத்தூர்: வில்லிவாக்கம் நேரு நகரை சேர்ந்தவர் சிதம்பரம் (60). கூலித் தொழிலாளி. இவர், நேற்று இரவு விளையாடி கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை கவனித்துகொண்டிருந்த அப்பகுதியினர் முதியவர் சிதம்பரத்தை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.

இதையடுத்து முதியவரை வில்லி வாக்கம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர், வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். மகளிர் போலீசார் முதியவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இன்று காலை சிறையில் அடைத்தனர்.

The post வில்லிவாக்கத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Read Entire Article