விரட்டிப்பிடித்தது கடலோர காவல்படை பாக். சிறைபிடித்து சென்ற 7 இந்திய மீனவர் மீட்பு

6 months ago 17

அகமதாபாத்: குஜராத் கடலோரப் பகுதியில் பாக். சிறைபிடித்து சென்ற 7 இந்திய மீனவர்களை கடலோர காவல்படை அதிரடியாக மீட்டது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த படகில் 7 இந்திய மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நடுக்கடலில் பாகிஸ்தான் கடல் பாதுகாப்பு ஏஜென்சி அமைப்பினர் 7 பேரை கைது செய்து கொண்டு சென்றனர். இந்த தகவல் இந்திய கடலோர காவல் படைக்கு தெரிய வந்தது. இதையடுத்து பாக். கப்பலை விரட்டிச்சென்று வழிமறித்த இந்திய கடற்படையினர் அவர்கள் பிடியில் இருந்த 7 இந்திய மீனவர்களை மீட்டனர். இதனால் நடுக்கடலில் மோதல் சூழ்நிலை உருவானது. இந்திய மீனவர்கள் படகுகளை பாக். படையினர் கடலில் மூழ்கடித்து விட்டனர். இருப்பினும் கடலோர காவல்படையினர் சிறப்பாக செயல்பட்டு மீட்கப்பட்ட மீனவர்களுடன் இந்தியக் கப்பல் நேற்று ஓகா துறைமுகத்திற்குத் திரும்பியது.

The post விரட்டிப்பிடித்தது கடலோர காவல்படை பாக். சிறைபிடித்து சென்ற 7 இந்திய மீனவர் மீட்பு appeared first on Dinakaran.

Read Entire Article