
லண்டன்,
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா) - கரேன் கச்சனோவ் (ரஷியா) உடன் மோதினார்.
இதில் முதல் 2 செட்டுகளை பிரிட்ஸ் கைப்பற்றிய நிலையில் 3-வது செட்டை கச்சனோவ் கைப்பற்றினார். இதனால் 4-வது செட் பரபரப்புக்குள்ளானது. இதனையடுத்து நடைபெற்ற 4-வது செட்டை பிரிட்ஸ் கைப்பற்றி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
டெய்லர் பிரிட்ஸ் இந்த ஆட்டத்தில் 6-3, 6-4, 1-6 மற்றும் 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் நடப்பு விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் வீரர் என்ற பெருமையை டெய்லர் பிரிட்ஸ் பெற்றுள்ளார்.