சென்னை: சென்னையில் தரையிறங்க வந்த விமானத்தின் மீது பச்சை நிற லேசர் ஒளி அடிக்கப்பட்டதாக விமானிகள் புகார் தெரிவித்துள்ளனர். துபாயிலிருந்து 304 பேருடன் சென்னை வந்த எமிரேட்ஸ் விமானம் தரையிறங்க முயன்றபோது லேசர் ஒளி அடிக்கப்பட்டது. கடந்த 10 நாட்களில் 2-வது முறையாக விமானத்தின் மீது லேசர் ஒளியை மர்ம நபர்கள் பாய்ச்சி அடித்துள்ளனர். பரங்கிமலை பகுதியில் இருந்து சக்தி வாய்ந்த பச்சை நிற லேசர் லைட் அடிக்கப்பட்டதாக விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
The post விமானத்தின் மீது லேசர் ஒளி; விமானிகள் புகார் appeared first on Dinakaran.