ராசிபுரம், ஜூன் 25: ராசிபுரத்தில் இருந்து சேலம் செல்லும் நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுக்க சென்டர் மீடியன் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம்-கரூர் அகல ரயில்பாதை திட்டத்தின் கீழ், நாமக்கல் கரூர் அகல ரயில் பாதை திட்டம் செயல்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் தரைப்பாலங்கள், மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. ராசிபுரத்தில் இருந்து சேலம் செல்லும் ெநடுஞ்சாலை, ராசிபுரத்தில் இருந்து நாமக்கல் செல்லும் ெநடுஞ்சாலையிலும் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ராசிபுரத்தில் இருந்து சேலம், ஆட்டையாம்பட்டி, வெண்ணந்தூர் போன்ற பகுதிகளுக்கும், ஆண்டகளூர் கேட், குருசாமிபாளையம், வையப்பமலை, திருச்செங்கோடு, புதுச்சத்திரம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வரக்கூடிய கனரக வாகனங்கள் அனைத்தும், ரயில்வே மேம்பாலம் வழியாக சென்று வருகிறது.
இந்த மேம்பாலங்கள் ஆரம்பிக்கும் போதும், முடியும் போது சாலைகள் மிகவும் குறுகலாகவும், எதிரெதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கும் உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துக்களும், உயிரிழப்புகளும் நடந்து வருகிறது. இதனை தவிர்க்க மேம்பாலத்தின் ஆரம்பம் மற்றும் முடிவு ஆகிய இடங்களில், சாலையின் நடுவே சென்டர் மீடியன் அமைக்க வேண்டும். எனவே, நெடுஞ்சாலைகளிலும் வளைவு பகுதிகளில் விபத்துகளை தடுக்க சென்டர் மீடியன் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post விபத்துகளை தவிர்க்க நெடுஞ்சாலையில் சென்டர் மீடியன் அமைக்க நடவடிக்கை பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.