விபத்தில் காயமடைந்த முதியவர் சாவு

2 months ago 10

திருவாடானை, நவ.26: திருவாடானை அருகே ஓரிக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ்(64). சந்தைகளில் மீன் வெட்டும் தொழில் செய்து வந்தார். கடந்த 22ம் தேதி நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பால்ராஜின் தலையில் பலத்த அடிபட்டு உயிருக்கு போராடியுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பால்ராஜ் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து திருவாடானை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post விபத்தில் காயமடைந்த முதியவர் சாவு appeared first on Dinakaran.

Read Entire Article