விதிமீறி இயங்கிய குடோனில் 890 கிலோ மாம்பழம் பறிமுதல்: அதிகாரிகள் நடவடிக்கை

21 hours ago 5

 

விருதுநகர், மே 30: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் பகுதியில் மாம்பழ குடோன்கள் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் இயங்கியதாக புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் மாரியப்பன் நேற்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார். இதில் ஒரு மாம்பழ குடோன் மூடப்பட்டது. அந்த குடோனில் இருந்து சுமார் 890 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் மற்றொரு மாம்பழ குடோனும் மூடப்பட்டது.

இது தொடர்பாக உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் வெளியிட்ட அறிக்கையில், காய்கறி, பழக்கடைகள், மாம்பழ குடோன்கள் மற்றும் தற்காலிக உணவுக் கடைகள் உள்ளிட்ட அனைத்து வகையான உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006ன் கீழ் தங்களது வணிகத்திற்கு உரிமம்/பதிவுச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதற்கான இணையத்தளம் https://foscos.fssai.gov.in ஆகும்.

உணவு பாதுகாப்பு உரிமமின்றி இயங்கும் உணவு வணிக நிறுவனங்கள் உடனடியாக நிறுத்தப்படுவதுடன், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும். பொதுமக்கள் உணவுப் பொருட்களின் தரங்கள் குறைபாடு குறித்து 94440 42322 என்ற மாநில வாட்ஸ்அப் புகார் எண்ணிலோ அல்லது https://foodsafety.tn.gov.in என்ற இணையத்திலோ அல்லது TN Food Safety என்ற செயலியிலோ புகார் அனுப்பலாம். புகாரை பெற்றவுடன் உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை அளிக்கப்படும். மேலும், புகார் அளிப்பவரது விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post விதிமீறி இயங்கிய குடோனில் 890 கிலோ மாம்பழம் பறிமுதல்: அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article