விஜய்யின் 10 நிமிட உரை முதல் போலீஸ் கெடுபிடி வரை: பரந்தூரில் நடந்தது என்ன?

4 months ago 16

காஞ்சிபுரம்: “சட்டத்துக்கு உள்பட்டு பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு நானும், எனது கட்சியினரும் துணை நிற்போம்” என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் அமைகிறது. இந்த விமான நிலையத்துக்காக பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 13 கிராமங்களில் இருந்து 5300 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முற்றிலும் கையகப்படுத்தப்பட உள்ளதால் அந்த கிராமத்தை மையமாக வைத்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

Read Entire Article