“விசிகவை மக்கள் முழுமையாக ஏற்கும் காலம் வரும்” - திருமாவளவன் நம்பிக்கை

15 hours ago 2

மதுரை: “எங்களது கட்சியை மக்கள் முழுமையாக ஏற்கும் காலம் வரும்” என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி நம்பிக்கை தெரிவித்தார்.

நெல்லையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி இன்று விமானம் மூலம் மதுரை வந்தார். அப்போது, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “திமுகவை ஆட்சியிலிருந்து விரட்ட யாருடனும் கூட்டணி வைப்போம் என எடப்பாடி பழனிச்சாமி கூறுவது, அவருடைய விருப்பம். கடந்த நான்கு ஆண்டுகள் ஆட்சியில், எண்ணற்ற நலத்திட்டங்களை திமுக அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. திமுக கூட்டணிக்கு பொது மக்களின் ஏகோபித்த ஆதரவு வழக்கம்போல கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

Read Entire Article