விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பார்சல் ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

4 months ago 34

விக்கிரவாண்டி, செப். 29: தேசிய நெடுஞ்சாலையில் பார்சல் ஏற்றி சென்ற லாரி திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.மதுரையில் இருந்து சென்னைக்கு பார்சல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை மதுரையை சேர்ந்த அயூப்கான்(61) என்பவர் ஓட்டி சென்றார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை 5.30 மணி அளவில் வந்தபோது, திடீரென லாரியில் இருந்து புகை வருவதை பார்த்த டிரைவர், லாரியை சாலையோரமாக நிறுத்தி தீயணைப்பு துறையினர் மற்றும் விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயணைப்பு துறை வீரர்கள் உதவியுடன் தீயை போராடி அணைத்தனர். இதனால் மிகப்பெரிய தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் லாரியில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான பார்சல் பொருட்கள் சேதமானது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் தீக்காயம் ஏற்படவில்லை. இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் பார்சல் ஏற்றி சென்ற லாரி திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பார்சல் ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article