விகிதாச்சாரத்தின் அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதி வரையறை: பொன்.குமார் வலியுறுத்தல்

3 hours ago 3

சென்னை: தமிழ்​நாடு விவ​சா​யிகள் - தொழிலா​ளர்​கள் கட்சி மற்​றும் தமிழக கட்​டிடத் தொழிலா​ளர்​கள் மத்​திய சங்​கத்தின் மாநில செயற் குழுக் கூட்​டம் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. சங்​கத் தலை​வர் பொன்.​கு​மார் தலைமை வகித்​தார். பொதுச் செய​லா​ளர்கள் எஸ்.ஜெகதீசன், ஜெக​முரு​கன், வி.சுப்​ப​ராயலு, மாநிலப் பொருளாளர் ஆர்​.சேகர் ஆகியோர் முன்​னிலை வகித்​தனர்.

கூட்​டத்​தில் இயற்​றப்​பட்ட தீர்​மானங்​கள்: மக்​கள் தொகை அடிப்​படை​யில் தொகுதி மறு​வரையறை செய்ய முயற்​சிக்​கும் மத்​திய அரசின் செய​லால், தமிழகம் உள்​ளிட்ட தென்​மாநிலங்​களின் நாடாளு​மன்​றத் தொகு​தி​ எண்​ணிக்கை குறைவதற்​கான ஆபத்து உள்​ளது. எனவே, தற்​போதுள்ள தொகு​தி​களின் அடிப்​படை​யிலேயே, விகி​தாச்​சார முறையில் தொகுதி மறுசீரமைப்பை மேற்​கொள்ள வேண்​டும்.

Read Entire Article