வாக்குச்சாவடிகளாக பயன்படுத்தப்படும் பள்ளிகளை தேர்தலுக்குப் பிறகு சுத்தப்படுத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

7 months ago 14

சென்னை: தேர்தல்களின் போது வாக்குச்சாவடிகளாக பயன்படுத்தப்படும் பள்ளிகளை தேர்தலுக்குப் பிறகு சுத்தப்படுத்துவது தொடர்பாக வழிகாட்டி நெறிமுறைகள் ஏதேனும் உள்ளதா? என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. “தேர்தல்களின் போது, வாக்காளர்களுக்கு தெரிவிக்க வேண்டிய அறிவிப்புகள், தேர்தலுக்கு பிறகு அகற்றப்பட்டு சுத்தப்படுத்தப்படுவது இல்லை. வாக்குச்சாவடியில் தேர்தல் அலுவலர்கள் பயன்படுத்திய உணவுக் கழிவுகள், உணவுப் பொட்டல கழிவுகள், காகிதப் பொருட்கள் அகற்றப்படுவதில்லை. பள்ளி திறந்த பிறகு ஆசிரியர்கள் தான் சுத்தப்படுத்துகின்றனர்” என வழக்கு ஹதொடரப்பட்டுள்ளது.

The post வாக்குச்சாவடிகளாக பயன்படுத்தப்படும் பள்ளிகளை தேர்தலுக்குப் பிறகு சுத்தப்படுத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article