வள்ளுவர் கோட்டம் புதுப்பொலிவு கண்டுள்ளது: முதல்-அமைச்சர் நெகிழ்ச்சி பதிவு

5 hours ago 2

சென்னை,

ரூ.80 கோடியில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை பொதுமக்களின் பார்வைக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

"தமிழரின் அடையாளங்களை எங்கும் நிறுவிய தலைவர் கலைஞரின் கனவுப் படைப்பான வள்ளுவர் கோட்டம் புதுப்பொலிவு கண்டுள்ளது. அனைவருக்கும் பொதுவான வள்ளுவரையும் - வள்ளுவத்தையும் போற்றுவோம்! மானிடச் சமுதாயம் முழுக்கக் கொண்டு சேர்ப்போம்!"

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.  

தமிழரின் அடையாளங்களை எங்கும் நிறுவிய தலைவர் கலைஞரின் கனவுப் படைப்பான #வள்ளுவர்_கோட்டம் புதுப்பொலிவு கண்டுள்ளது!அனைவருக்கும் பொதுவான வள்ளுவரையும் - வள்ளுவத்தையும் போற்றுவோம்! மானிடச் சமுதாயம் முழுக்கக் கொண்டு சேர்ப்போம்!#வள்ளுவம்_போற்றுதும்! pic.twitter.com/OxDIJYj85W

— M.K.Stalin (@mkstalin) June 21, 2025
Read Entire Article