வலையபட்டி அடைக்கன் குளக்கரையில் குண்டும் குழியுமான சாலையை சரி செய்ய கோரிக்கை

3 months ago 10

பொன்னமராவதி, நவ.28: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் உள்ள வலையபட்டி அடைக்கன் குளக்கரையில் செல்லும் சாலையில் குண்டும் குழியுமான சாலையினை சரி செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னமராவதியில்உள்ள வலையபட்டி அடைக்கன் குளக்கரையினை சுற்றி தார் சாலை உள்ளது. இந்த சாலையின் மேற்குப் பகுதி குண்டும் குழியுமாக பழுதடைந்து கிடக்கின்றது. தற்போது பெய்து வரும் தொடர் மழையினால் இந்த சாலையில் உள்ள குழிகளில் சிறிது குளம் போல தண்ணீர் தேங்கி நிற்கின்றது.

இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்த சாலையினை தரமான தார் சாலையாக அமைத்துக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வலையபட்டி அடைக்கன் குளக்கரையில் குண்டும் குழியுமான சாலையை சரி செய்ய கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article