மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்து சீராக அதிகரித்து வந்த பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் 0.9% வரை உயர்ந்து முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 632 புள்ளிகள் உயர்ந்து 76,533 புள்ளிகளானது உயர்ந்தது. இடைநேர வர்த்தகத்தின்போது சென்செக்ஸ் 698 புள்ளிகள் வரை அதிகரித்த போதிலும் முடிவில் 632 புள்ளிகளில் நிலைபெற்றது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 23 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 203 புள்ளிகள் உயர்ந்து 23,163 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
The post வர்த்தகம் தொடங்கியதில் இருந்து சீராக அதிகரித்து வந்த பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் 0.9% வரை உயர்ந்து நிறைவு appeared first on Dinakaran.