‘வருங்கால முதல்வரே’ - நயினார் நாகேந்திரனை வாழ்த்தும் சுவரொட்டிகளால் சலசலப்பு

3 weeks ago 5

திருநெல்வேலி: திருநெல்வேலியில் பல்வேறு இடங்களில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை ‘வருங்கால முதல்வரே’ என்று வாழ்த்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பது பேசுபொருளாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் வரும் 2026 சட்டப் பேரவை தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளதை கடந்த சில நாட்களுக்குமுன் மத்திய அமைச்சர் அமித் ஷா அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதற்கு அடுத்தநாள் தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். நேற்று கட்சி தலைமையகமான கமலாலயத்துக்கு சென்று நயினார் நாகேந்திரன் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.

Read Entire Article