வந்தே பாரத் ரயில்களில், காலை வேளையில், அசைவ உணவு தவிர்க்கப்படவில்லை; அவ்வாறான செய்தி தவறு: தெற்கு ரயில்வே விளக்கம்

1 day ago 5

சென்னை: வந்தே பாரத் ரயில்களில், காலை வேளையில், அசைவ உணவு தவிர்க்கப்படவில்லை; அவ்வாறான செய்தி தவறு என தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு, இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயில் வேகமாக இயக்கும் வகையில் சொகுசாகவும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட நகரங்களுக்கு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் சென்னையிலிருந்து புறப்படும் வந்தே பாரத் ரயிலில் விருப்பமுள்ள உணவை தேர்ந்தெடுக்கும் பகுதியில் காலை சிற்றுண்டியில் அசைவ உணவு என்ற வாய்ப்பை, ஐஆர்சிடிசி முன் அறிவிப்பின்றி நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தொடர்ந்து, சென்னையிலிருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, மைசூரு, பெங்களூரு போன்ற பகுதிகளுக்கு வந்தே பாரத்தில் செல்லும் பயணிகள் இது தொடர்பாகப் புகார் அளித்திருப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. தெற்கு ரயில்வே அல்லது ஐஆர்சிடிசி தரப்பில் இது குறித்து முன்கூட்டியே எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் வந்தே பாரத் ரயில்களில், காலை வேளையில், அசைவ உணவு தவிர்க்கப்படவில்லை; அவ்வாறான செய்தி தவறு என தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. ஆன்லைன் முன்பதிவில் உணவை தெரிவு செய்யும் ஆப்ஷனுக்கான புரோகிராமில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது: தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு விட்டது. வந்தே பாரத் ரயில்களில், காலை உணவு பட்டியலில், சைவம், மற்றும் அசைவ உணவுகள் இடம்பெறுகின்றன. வந்தே பாரத் ரயில் பயணிகள், தங்கள் விருப்பம் போல், சைவ, அசைவ உணவுகளை தேர்வு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வந்தே பாரத் ரயில்களில், காலை வேளையில், அசைவ உணவு தவிர்க்கப்படவில்லை; அவ்வாறான செய்தி தவறு: தெற்கு ரயில்வே விளக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article