வண்டலூர் தனியார் கல்லூரியில் ஆம்புலன்ஸ் டிரைவர் வெட்டிக்கொலை..!!

5 hours ago 3

வண்டலூர்: வண்டலூர் தனியார் கல்லூரியில் ஆம்புலன்ஸ் டிரைவர் மணிகண்டன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வண்டலூர் அருகே உள்ள கீரப்பாக்கம் துலுக்காநத்தமன் பகுதியை சேர்ந்தவர் சவுந்தர்ராஜ். இவரது ஓரே மகன் மணிகண்டன்(21) வண்டலூர் பகுதியில் உள்ள கிரசண்ட் கல்லூரியில் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலைபார்த்து வந்தவர். கடந்த 2 ஆண்டுகளாக மேலாக அவர் அந்த கல்லூரியில் வேலைபார்த்து வந்துள்ளார். இரவு பணிகளுக்கு அவர் வழக்கமாக சென்று கொண்டிருந்துள்ளார்.

அவரது வீடு கட்டும் பணிகளானது கீரப்பாக்கத்தில் நடந்து கொண்டிருந்த காரணமாக அவர் இரவு பணிக்கு தொடர்ந்து சென்றுள்ளார். அந்த கல்லூரியில் பணியாற்றிவிட்டு அங்குள்ள ஓட்டுனர்கள் ஓய்வறையில் படுப்பது வழக்கம். இந்தநிலையில் இன்று காலை 7 மணிக்கு மர்ம நபர்கள் சிலர் அந்த கல்லூரிக்குள் புகுந்து அங்குள்ள ஓய்வறையில் தூங்கி கொண்டிருந்த மணிகண்டனை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில், மணிகண்டனின் தலை, கழுத்து, முதுகு உட்பட பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். கல்லூரி ஊழியர்கள் அங்கு சென்று பார்த்த போது ரத்தவெள்ளத்தில் இருந்துள்ளார்.

அருகில் இருந்தவர்கள் உடனடியாக கிளாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்த கிளாம்பாக்கம் இன்ஸ்பெக்ட்டர் ஆல்வின்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி மணிகண்டனின் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மணிகண்டன் எதற்காக கொலை செய்யப்பட்டார், பாதுகாப்பான கல்லூரியில் எப்படி வெளி நபர்கள் உள்ளே சென்று சம்பவத்தில் ஈடுபட்டார்கள் என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முழுவதுமாக சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் கல்லூரியிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் எந்த நபர் உள்ளே வந்துள்ளார். யாரெல்லாம் கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது பற்றிய முதற்கட்ட தகவல்களை விசாரித்து வருகின்றனர். விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post வண்டலூர் தனியார் கல்லூரியில் ஆம்புலன்ஸ் டிரைவர் வெட்டிக்கொலை..!! appeared first on Dinakaran.

Read Entire Article