கடலூர், பிப். 10: வடலூரில் நடைபெறும் தைப்பூச ஜோதி தரிசனத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 2003ம் ஆண்டு தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை விதி எண்-12 மற்றும் ஆணையர் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கடிதத்தின்படி வடலூரில் நாளை(11ம் தேதி) நடைபெறும் தைப்பூச ஜோதி தரிசன விழாவை முன்னிட்டு நாளை கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள், அரசு மதுபான கூடங்கள், பார்கள் மூடப்பட வேண்டும், என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் ஜோதி தரிசன விழாவின் கொடியேற்றம் நடைபெறும் நாளான இன்று மற்றும் ஒரு கால ஜோதி தரிசனம் நடைபெறும் நாளை மறுநாள் மற்றும் 13ம் தேதி வடலூர் மேட்டுக்குப்பம் சித்திவளாகம் பகுதியில் நடைபெறும் வள்ளலார் திருவறை தரிசனத்தை முன்னிட்டு வடலூர், கருங்குழி, மேட்டுக்குப்பம், மருதூர், நெத்தனாங்குப்பம், பார்வதிபுரம், சேராக்குப்பம் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகள் ஆகியவையும் மூடப்பட வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி தினங்களில் மதுபான கடைகளை திறந்து மதுபானங்கள் விற்றாலோ, அரசு மதுபான கூடங்கள் மற்றும் மதுபான கூடங்களில் மதுபானங்கள் விற்றாலோ டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என தெரிவித்துள்ளார்.
The post வடலூரில் நாளை தைப்பூச ஜோதி தரிசனம் கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு appeared first on Dinakaran.