வடமதுரை பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் அவதி

7 months ago 18

 

ஊத்துக்கோட்டை, நவ. 8: வடமதுரை பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். பெரியபாளையம் தாமரைப்பாக்கம் சாலையில் வடமதுரை, எர்ணாங்குப்பம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள சாலையில் ஏராளமான மாடுகள் சுற்றித் திரிகின்றன.

அப்போது, இந்நிலையில், கிராமங்களில் இருந்து பொதுமக்களும் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் சாலையில் செல்லும்போது, மாடுகள் ஒன்றோடு ஒன்று சண்டை போட்டுக்கொண்டு அவர்களை முட்டித் தள்ளும் நிலை உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, சாலையில் திரியும் மாடுகளை பிடித்து கோசாலையில் ஒப்படைக்க வேண்டும். மேலும் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post வடமதுரை பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் அவதி appeared first on Dinakaran.

Read Entire Article