வடசென்னை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடக்கம்

4 months ago 13

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், 2வது நிலையில் 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தியும் என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 2ம் தேதி கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 1வது நிலையில் உள்ள 1வது அலகில் 210 மெகாவாட், 2வது நிலையில் உள்ள 2வது அலகில் 600 மெகாவாட் என 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. தற்போது, கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் 2 அலகுகளில் 810 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

The post வடசென்னை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article