சென்னை: தமிழகத்தில் சித்திரை மாதம் முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாளை தமிழ்ப் புத்தாண்டு கொண்டப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் பொதுமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி: தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துச் செய்தியில், "எனதருமை தமிழ்க் குடிமக்கள் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தினமாக பன்னெடுங் காலமாய்க் கொண்டாடி மகிழ்கின்றார்கள். புதிய தமிழ் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகள், புதிய நம்பிக்கைகளோடு கூடிய புதிய உத்வேகம் பிறக்கட்டும்!