வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது

2 months ago 15

டெல்லி: தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெறக் கூடும். அடுத்த 2 நாட்களில் வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகரும். தமிழ்நாட்டின் கடற்கரையை நோக்கி காற்றழுத்த தாழ்வுப்பகுதி நகரும். தமிழ்நாட்டை நோக்கி காற்றழுத்த தாழ்வுப்பகுதி நகரக்கூடும் என்பதால் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளது.

The post வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது appeared first on Dinakaran.

Read Entire Article