
புதுடெல்லி,
குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒரு வக்கீலுக்கு அவரது கட்சிக்காரர் தொடர்பான வழக்கு தொடர்பாக போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அதை ரத்து செய்ய அவர் தாக்கல் செய்த மனுவை குஜராத் ஐகோர்ட்டு ஏற்கவில்லை. அந்த உத்தரவை எதிர்த்து, வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அம்மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன், கோடீஸ்வர சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியதாவது:-
வக்கீல் தொழில் என்பது நீதி நிர்வாக நடைமுறையின் ஒருங்கிணைந்த பகுதி. எனவே, வக்கீலுக்கு நேரடியாக சம்மன் அனுப்ப விசாரணை அமைப்புகளையும், போலீசையும் அனுமதிப்பது, வக்கீல் தொழிலின் தன்னாட்சியை சிறுமைப்படுத்தி விடும். மேலும், நீதி நிர்வாகத்தின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலாக அமையும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர். போலீசாரின் நோட்டீசை செயல்படுத்த இடைக்கால தடை விதித்தனர்.