டெல்லி: வக்ஃபு திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. திமுக சார்பில் அக்கட்சியின் எம்.பி. ஆ.ராசா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அரசமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையை மீறும் வகையில் வக்ஃபு சட்ட திருத்தம் என்றும், வக்ஃபு சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் திமுக மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வக்ஃபு வாரிய சட்டத்திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 8 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
The post வக்ஃபு திருத்த சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது திமுக..!! appeared first on Dinakaran.