மதுரை: மதுரையில் உள்ள எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்த கவிதா, அடிதடி வழக்கு தொடர்பாக ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை கைது செய்ய அந்தக் காவல்நிலையத்தில் எஸ்.ஐயாக பணியாற்றிய சண்முகநாதன் (35) என்பவர், கவிதாவிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் சஸ்பெண்ட செய்யப்பட்டுள்ளார்.
The post லஞ்சம் வாங்கிய எஸ்ஐ சஸ்பெண்ட் appeared first on Dinakaran.