ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு எதிரொலி; மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் உயர்வு..!!

14 hours ago 3

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 748 புள்ளிகள் அதிகரித்து 82,190 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 25 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தமாகி வருகின்றன. குறுகியகாலக் கடனுக்கான வட்டிவிகிதத்தை 6%ல் இருந்து 5.5%ஆக ரிசர்வ் வங்கி குறைத்ததால் வங்கித்துறை பங்குகள் விலை உயர்ந்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 240 புள்ளிகள் அதிகரித்து 24940 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது. காலையில் சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் ரெப்போ வட்டி விகிதம் குறைப்பை அடுத்து 1% உயர்ந்துள்ளது.

The post ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு எதிரொலி; மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் உயர்வு..!! appeared first on Dinakaran.

Read Entire Article