ரூ.4 ஆயிரத்துக்கும் அதிகமான மின்கட்டணத்தை மின்வாரிய அலுவலகங்களில் செலுத்தும் வசதி திடீர் நிறுத்தம்

4 months ago 18

சென்னை: மின்வாரிய அலுவலகங்களில் ரூ.4 ஆயிரத்துக்கும் அதிகமான மின்கட்டணத்தை நேரடியாக செலுத்தும் வசதி கணினியில் முடக்கப்பட்டுள்ளது. முறையான அறிவிப்பின்றி நடைமுறைப்படுத்துவதால் ஊழியர்களும் பொதுமக்களும் அவதிக்கு ஆளாகியுள்ளதாக மின்ஊழியர் மத்திய அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், மின்வாரிய தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: தமிழகத்தில் 2024-ம் ஆண்டு தரவுகளின்படி 3.45 கோடி மின்இணைப்புகள் உள்ளன.

Read Entire Article