ரூ.329 கோடியை வௌிநாட்டிற்கு அனுப்பியவருக்கு ஜாமீன்

7 hours ago 3

புதுடெல்லி: இந்தியாவிற்கு வெளியே ரூ.329கோடி மதிப்புள்ள நிதியை சட்டவிரோதமாக மாற்றிய பணமோசடி வழக்கில் கைதானவருக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. போலி நிறுவனங்களை உருவாக்கி போலி இறக்குமதி ரசீதுகள் மூலமாக இந்தியாவிற்கு வெளியே ரூ.329கோடி நிதியை சட்டவிரோதமாக மாற்றியது தொடர்பாக பணமோசடி வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றது.

இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூலையில் ஆஷிஷ் குமார் வர்மா, விபின் பத்ரா, ரூபேஷ் பத்ரா மற்றும் மோகன் மதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஐதீன் சோப்ரா கடந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி காவலில் எடுக்கப்பட்டார். இந்நிலையில் ஜாமீன் கோரி அவர் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த கூடுதல் செசன்ஸ் நீதிபதி அபர்ணா சுவாமி அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

The post ரூ.329 கோடியை வௌிநாட்டிற்கு அனுப்பியவருக்கு ஜாமீன் appeared first on Dinakaran.

Read Entire Article