ரூ.22 கோடி செலவில் சுரங்கப்பாலம் கட்டும் பணி

2 months ago 11

திருப்பூர், நவ.10: திருப்பூர் மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் திருப்பூர் வளர்மதி பாலம் அருகில் நெடுஞ்சாலைத்துறையினரால் ரூ.22 கோடி செலவில் சுரங்கப்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சுரங்கப்பாலப்பணியை திருப்பூர் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் ரத்தினசாமி ஆய்வு செய்தார். மேலும் பாலப்பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வில் வடக்கு உட்கோட்டத்தை சேர்ந்த உதவி கோட்ட பொறியாளர் விஜயகுமார் மற்றும் இளநிலை பொறியாளர் ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post ரூ.22 கோடி செலவில் சுரங்கப்பாலம் கட்டும் பணி appeared first on Dinakaran.

Read Entire Article