சென்னை: ஆயிரம் விளக்கு பகுதியில் நடந்த ரூ.20 லட்சம் வழிப்பறி சம்பவத்தில் கைதான வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேரின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை திருவல்லிக்கேணியில் கடந்த டிச.15-ம் தேதி ரூ.20 லட்சத்துடன் வந்த தனியார் நிறுவன ஊழியர் முகமது கவுஸ் என்பவரை மடக்கி, ஹவாலா பணம் என கூறி காரில் கடத்திச் சென்று, ரூ. 15 லட்சத்தை வழிப்பறி செய்த வழக்கில் சிறப்பு எஸ்.ஐ-க்கள் ராஜா சிங், சன்னிலாய்டு மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.