சென்னை: அரசு மருத்துவர்களுக்கு நியாயமான ஊதியம் உள்ளிட்ட பலன்கள் கிடைக்கும் வகையில் அரசாணை 354-ஐ அமல்படுத்தக் கோரி இறுதிவரை போராடியவர் அரசு மருத்துவர் லட்சுமி நரசிம்மன். இவர் கடந்த 2020 பிப்.6-ம் தேதி உயிரிழந்தார்.
இதுவரை இந்த அரசாணையும் அமலாகவில்லை. இந்த பின்னணியில் ‘மருத்துவர் லட்சுமி நரசிம்மனின் உயிர்த் தியாகத்துக்கு மதிப்பில்லையா?’ என்ற தலைப்பில் அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்குழு தலைவர் எஸ்.பெருமாள் பிள்ளை எழுதிய கட்டுரை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் கடந்த 7-ம் தேதி வெளியானது.