ராமநாதபுரம்: 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தளவாயான் சேதுபதி மன்னரின் புதிய கல்வெட்டு கண்டுபிடிப்பு

2 months ago 10

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் குளத்தூரில் துணி துவைக்கப் பயன்படுத்திய கல்லில் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த தளவாயான் சேதுபதி மன்னரின் புதிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் , பரமக்குடி வட்டம் குளத்தூர் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியின் ஆசிரியர்கள் சி.பால்துரை, சி.ராமமூர்த்தி ஆகியோர் தங்கள் பள்ளி மாணவர் பர்ஜித் வீட்டின் பின்புறம் துணி துவைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கல்லில் பழமையான கல்வெட்டு இருப்பதாக ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுருவுக்கு தகவல் கொடுத்தனர்.

Read Entire Article