ராமதாஸ் நடத்திய கூட்டம் சட்டவிதிகளுக்கு முரணானது: அன்புமணி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்

3 hours ago 1

சென்னை: ராம​தாஸ் தலை​மை​யில் நடை​பெற்ற கூட்​டம் சட்ட விதி​களுக்​கும், சட்​டத்​துக்​கும் முரணானது என்று அன்​புமணி தலைமை​யில் நடந்த பாமக அரசி​யல் தலைமைக் குழு கூட்​டத்​தில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. சென்னை அடுத்த பனையூரில் அன்​புமணி தலை​மை​யில் அரசி​யல் தலைமைக் குழு கூட்​டம் நேற்று நடந்​தது.

கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் வடிவேல் ராவணன், பொருளாளர் தில​க​பாமா உள்​ளிட்ட அரசி​யல் தலை​மைக்​குழு உறுப்​பினர்​கள் பங்கேற்றனர். இதில் நிறைவேற்​றப்​பட்ட தீர்​மானங்​கள் வரு​மாறு: பாமக அடிப்​படை​யில் ஜனநாயக அமைப்பு ஆகும். பாமக நிறு​வன​ரான ராம​தாஸை கட்சி எப்​போதும் கொண்​டாடு​கிறது. போற்றி வணங்​கு​கிறது. அதே​நேரத்​தில் கட்​சியை வழிநடத்தி செல்​வது பொதுக்​குழு​வால் முறைப்​படி தேர்ந்​தெடுக்​கப்​பட்ட கட்சி தலை​வரின் பணி​யாகும்.

Read Entire Article