ராமதாஸ்-அன்புமணி இருவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்: ஜி.கே.மணி

1 week ago 6

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள இல்லத்தில், பாமக நிறுவனர் ராமதாஸை சந்திக்க வருகை தந்த பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இருவரும் அரசியல் புரியாதவர்கள் அல்ல; இரு தலைவர்களும் பேச வேண்டும். இருவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்பது தான் எங்கள் அனைவரின் ஆசை. பாமகவில் சுமூக தீர்வு ஏற்படுவது இருவரின் கையில்தான் உள்ளது. இருவரும் சேர்ந்து பேசி முன்னெடுத்து சென்றால் நன்றாக இருக்கும் என்பதை தான் நாங்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றோம். அதற்கான சூழ்நிலை விரைவில் உருவாகும் என நினைக்கிறோம்.

இருவரும் பேசி தீர்வு கண்டால் கட்சியின் வளர்ச்சிக்கும், தேர்தலை சந்திப்பதற்கும், கட்சியினருக்கு உள்ள மன உளைச்சலுக்கும் நல்ல தீர்வாக இருக்கும். அதை தான் தினந்தோறும் பேசி வலியுறுத்தி கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article