ராசிபுரத்தில் சோதனை:குட்கா பதுக்கிய கடைகளுக்கு அபராதம்

2 months ago 9

ராசிபுரம், டிச.19: ராசிபுரம் பகுதியில் அதிரடி சோதனை நடத்திய அதிகாரிகள், குட்கா பதுக்கிய கடைகளுக்கு அபராதம் விதித்தனர். ராசிபுரம் பகுதியில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, நகராட்சி ஆணையாளர் கணேசன் உத்தரவின்பேரில் துப்புரவு அலுவலர் செல்வராஜ், ஆய்வாளர் கோவிந்தராஜன் மற்றும் பணி மேற்பார்வையாளர்கள், பரப்புரையாளர்கள் கடை கடையாக சோதனை மேற்கொண்டனர்.

இதில், பட்டணம் சாலையில் உள்ள கடைகளில் பான்மசாலா, புகையிலை உள்ளிட்ட போதை வஸ்துக்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் பதுக்கி வைத்து விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக 8 கடைகளுக்கு தலா ₹10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

The post ராசிபுரத்தில் சோதனை:குட்கா பதுக்கிய கடைகளுக்கு அபராதம் appeared first on Dinakaran.

Read Entire Article