ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு தள்ளிவைப்பு

2 months ago 12

சுல்தான்பூர்: கர்நாடகாவில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது பிரசாரம் செய்த ராகுல் காந்தி ஒன்றிய அமைச்சர் அமித் ஷா குறித்து ஆட்சேபனைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக உத்தரபிரதேச பாஜ மூத்த தலைவர் விஜய் மிஸ்ரா ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு மீது சுல்தான்பூரில் உள்ள எம்பி எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சிறப்பு நீதிமன்ற நீதிபதி விடுமுறையில் இருப்பதால் வரும் 23ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

 

The post ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article