ரயில்வே வளர்ச்சிக்கு தமிழகத்தில் தனி அமைச்சகம் ஏன் அவசியம்?

4 months ago 16

திருநெல்வேலி: தமிழகத்தில் ரயில்வே துறை வளர்ச்சிக்கு தனி அமைச்சகம் மற்றும் தலைமைச் செயலகத்தில் தனி செயலகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்றுள்ளது. சமீபத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் சென்னைக்கு வந்தபோது, மதுரை - தூத்துக்குடி இருப்பு பாதை திட்டம் குறித்து வெளியான கருத்து, தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து ரயில்வே துறை சார்பாக அதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது.

ரயில்வே துறை வளர்ச்சியில் தமிழகம் மிகவும் பின்தங்கியுள்ளதையே இச்சம்பவம் காட்டுகிறது என்று பயணிகள் சங்கங்கள் தெரிவித்து வருகின்றன. தமிழகத்தில் ரயில்வே வளர்ச்சியை கருத்தில் கொண்டு தனி அமைச்சகம், தலைமைச் செயலகத்தில் தனி செயலகம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

Read Entire Article