மும்பை: ரயில்களில் ஏன் தானியங்கி கதவு அமைப்பை உருவாக்க முடியாது? என ரயில்வே அதிகாரிகளுக்கு மும்பை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. ரயில்கள் அனைத்திலும் ஏன் தானியங்கி கதவுகளை நிறுவ முடியாது?. தினமும் 10 பேர் ரயில் விபத்தில் பலியாகும் நிலையில் ஏன் தானியங்கி கதவு அமைப்பை உருவாக்க முடியாது? என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். மும்பையில் நெரிசலால் ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்து 4 பேர் பலி; 8 பேர் படுகாயம் அடைந்தனர். மும்பை ஐகோர்ட்டில் தொடர்ந்த பொதுநல வழக்கு தலைமை நீதிபதி தேவேந்திர குமார் ஆராதே அமர்வில் விசாரணை நடைபெற்றது.
The post ரயில்கள் அனைத்திலும் ஏன் தானியங்கி கதவுகளை நிறுவ முடியாது?: மும்பை ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.