சென்னை: மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் எனும் தேர்தல் பிரச்சாரப் பயணத்தை நாளை (திங்கள் கிழமை) தொடங்க உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ரத்தத்தின் ரத்தமே வா என அழைத்து தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடித விவரம்: எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தங்களே, அம்மாவின் உயிருக்கு உயிரான விசுவாசிகளே, எனது உணர்வுகளில் கலந்திருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற மாபெரும் மக்கள் இயக்கத்தின் இரண்டு கோடிக்கும் அதிகமான தொண்டர்களே, உங்கள் அனைவருக்கும் எனது இதயத்திலிருந்து ஊற்றெடுக்கும் அன்பார்ந்த வணக்கம்!